கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
விஜயுடன் நடித்த,"நண்பன் ஹிட்டானாலும், மெல்லிடையாள் இலியானாவை, கோலிவுட் பக்கம் காண முடியவில்லை. ரண்பீர் கபூருடன் ஜோடி சேர்ந்த, "பர்பி பாலிவுட்டில் பரபரப்பாக ஓடியதால், அம்மணி அங்கேயே, செட்டில் ஆகி விட்டார். இப்போது, ஷாகித் கபூருடன், "படா போஸ்டர் நிக்லா ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். "பாலிவுட்டை ஒரு கை பார்க்காமல் வருவது இல்லை என்ற சபதத்துடன், மும்பையில் முகாமிட்டுள்ள இலியானாவிடம், "படங்களில் நடிப்பதற்கு, நீங்கள் அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறதே என, கேட்டால், சிறிது நேரம் பதில் எதுவும் கூறாமல், அமைதி காத்த, இலியானா, அதற்கு பின், பட படவென பொரிந்து தள்ளினார். "யார் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என்பதை பற்றி, எனக்கு கவலை இல்லை; அதைப் பற்றி தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. என்னுடைய உழைப்புக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டுமோ, அதைத் தான் கொடுக்கின்றனர். அதைத் தான், நானும் கேட்கிறேன். என்ன சம்பளம் வாங்குகிறேனோ, அதற்கு நான், தகுதியானவள் தான் என்கிறார், இலியானா.