பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படம் நேற்றைய தினம் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகி இருப்பதை அடுத்து ஹாலிவுட் படங்களான சாங் சி மற்றும் எப்-9 ஆகிய படங்களும் இந்தியா முழுக்க திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. அதோடு இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகின்றன. இந்த செய்தி கங்கனாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வழியான பெல்பாட்டம் திரைப்படம் 4 நாட்களில் 2.75 கோடிகளை வசூலித்தபோது, ஹாலிவுட் படமான சாங் சி முதல் மூன்று தினங்களில் 12.63 கோடிகளை வசூலித்தது. இப்படி அக்ஷய்குமார் போன்ற நடிகர்களின் படங்களுக்கே இந்த நிலை என்றால் தனது தலைவி படத்தின் வசூல் இந்த ஹாலிவுட் படங்களை பாதிக்கப்படுமோ என்ற அதிர்ச்சி காரணமாகவே ஹாலிவுட் படங்களால் இந்திய படங்களின் வசூல் பாதிக்கிறது. அதனால் ஹாலிவுட் படங்களின் இந்திய ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்று ஒரு அதிரடி கருத்து வெளியிட்டுள்ளார் கங்கனா.