கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தேவயானியின் கணவர் ராஜகுமாரன். சினிமாவை விட்டு விலகி தேவயானியின் குடும்பத்தை கவனித்து வரும் ராஜகுமாரன் மீண்டும் இயக்குனராக ஆசைப்பட்டு அவரது மனைவி தேவயானியே ஹீரோயினாக நடிக்க திருமதி.தமிழ் என்ற படத்தை ஆரம்பித்தார். தயாரிப்பாளர் தேவயானிதான். பொருளாதார சிக்கல் காரணமாக பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் இந்தப் படத்தை பொங்கலுக்கு எப்படியாவது வெளியிட்டு விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் ராஜகுமாரன். ஆனால் தேவயானி இதில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கிறாராம். படம் இக்காலத்துக்கு ஏற்ற வகையில் இல்லை. மேலும் பணம் செலவு செய்து படத்தை வெளியிட்டாலும் போட்ட பணம் வருமா என்பதுதான் அவரது கவலையாம். அதனால் இதுவரை செலவு செய்த பணம் திருப்பி கிடைக்கும் வகையில் யாராவது வாங்கிக் கொண்டால் நல்லது என்று நினைக்கிறாராம். இதனால் படம் வாங்கி வெளியிடும் நிறுவனங்களிடம் தேவயானி பேசி வருவதாகச் சொல்கிறார்கள். எப்படியோ கணவருக்காக கஷ்டப்படும் நடிகைகள் பட்டியலில் தேவயானியும் சேர்ந்து விட்டார்.