கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
வாசுகி என்ற படத்தில் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்வேதா. அதன்பிறகு பயணங்கள் தொடரும், நானும் என் காதலும், இதயம் திரையரங்கம், கூட்டாஞ்சோறு உள்பட பல படங்களில் நடித்த இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு சரியான இடம் இன்னமும் கிடைக்கவில்லை. காரணம், நான் இப்படித்தான் நடிப்பேன். எக்காரணம் கொண்டும் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று ஏகத்துக்கு கண்டிசன் போட்டு வந்தார் நடிகை. கூடவே மேற்படி நடிகையின் தந்தைகுலமும், என் மகளின் திறமைக்கு அவளை தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். அப்புட்டு திறமை அவளுக்குள் தேங்கிக்கிடக்கிறது என்றும் இயக்குனர்களிடம் மகள் புராணம் வாசித்து வருவார்.இதனால் நடிகை, தந்தைகுலத்துடன் வருகிறார் என்றாலே இயக்குனர்கள் காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டுதான் பேசுவார்கள்.
இப்படி தனக்கென ஒரு இமேஜை கிரியேட் பண்ணி வைத்திருக்கும் ஸ்வேதாவுக்கு சினிமாவில் எதிர்பார்த்தபடி இடம் கிடைக்காதால், இப்போது தனது ஒடடுமொத்த கண்டிசன்களையும் ஏறக்கட்டி விட்டார். சான்ஸ் கொடுத்தால் போதும் டூ-பீஸ் ரேஞ்சுக்கு திறமை காட்டவும் தயாராக இருக்கிறேன் என்று தொடை தட்டி வருகிறார். கூடவே தனது பெயரை ஸ்வேதா ராவ் என்றும் திருத்தம் செய்திருக்கும் நடிகை, சில முன்னணி இயக்குனர்களின் சீக்ரெட் செல் நமபர்களை சேகரித்துக்கொண்டு, அவர்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ் விட்டும் சான்ஸ் பிடித்து வருவதாகவும் ஒரு ரகசிய தகவல் தெரிவிக்கிறது.