சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? |
ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படம் மூலம் கோடம்பாக்கத்துக்கு வந்தவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். முதல் படத்திலேயே எமியின் நடிப்பு கவரும்படியாக இருந்ததால், அவரை விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக் படத்தில் நடிக்க வைத்தார் கெளதம்மேனன். அதையடுத்து மதராசப்பட்டினம் விஜய் தான் இயக்கிய தாண்டவம் படத்திலும் நடிக்க வைத்தார். இதைப்பார்த்த பிரமாணட இயக்குனர் ஷங்கர் தனது ஐ படத்தின் நாயகியாககவும் எமியை கமிட் பண்ணினார். இதனால் முன்னணி நடிகை பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டார் எமி ஜாக்சன்.
தற்போது ஐ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பை 45 நாட்களாக சீனாவில் படமாக்கிவிட்டு சென்னை வந்திருக்கும் ஷங்கர், விக்ரம்-எமி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை இங்கு படமாக்குகிறார். அதில் சில காட்சிகளில் எமிக்கு கூடுதலான டயலாக்குகள் உள்ளதாம். அதனால் அத்தனை பேப்பர்களையும் தனது பாஷையான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வைத்துக்கொண்டு, தினமும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து உட்கார்ந்து கொண்டு பரீட்சைக்கு படிப்பது போல் டயலாக்குகளை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறாராம் எமி. காலை 9 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கியதும் பரீட்சை எழுதப்போகும் மாணவி போன்று பவ்யமாக அவர் வந்து நிற்கும் அழகைப்பார்த்து, ஐ படக்குழுவே எமிக்கு சல்யூட் அடிக்கிறதாம். அந்த அளவுக்கு தொழிலில் தனி ஈடுபாடு காட்டுகிறாராம் நடிகை.