டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபத்தில் மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்த பாலன், கவுதம் மேனன், பாலாஜி சக்திவேல், ஏ.ஆர்.முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் ஆகிய 11 இயக்குனர்கள் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினர். இவர்கள் புதிய படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், இதில் நாயகனாக நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட படமாக இது தயாராவதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் கனவு படமான இரும்புக்கை மாயாவி தான் இந்த படம்.
தற்போது ஞானவேல் இயக்கும் ஜெய்பீம், பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. இவற்றுள் ஜெய்பீம் படம் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்துக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ள சூர்யா, அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.