குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
தமிழில் பானா காத்தாடியில் அறிமுகமான சமந்தா. இங்கு சரியான வாய்ப்பு இல்லாமல் தெலுங்கிற்கு சென்று முன் வரிசையைப் பிடித்தார். நான் ஈ படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி ஆனார். இப்போது கவுதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமந்தாவுக்கு சரும நோய் வந்திருக்கிறது. அவருக்கு வெயில் ஒத்துக்காது என்றெல்லாம் செய்திகள் வந்தது. இதன் காரணமாக மணிரத்தினத்தின் கடல். ஷங்கரின் ஐ படங்களில் நடிக்கும் வாய்ப்பபை இழந்தார் என்று கூறப்பட்டது. ஆனாலும் சமந்தா மீண்டும் வந்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை வாய் திறக்காமல் இருந்தவர் இப்போது அதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: எனக்கு எந்த சரும நோயும் கிடையாது. அது மீடியாக்கள் எனக்கு கொடுத்த நோய். திடீரென்று ஒரு நாள் காய்ச்சல் வந்தது. டாக்டரிடம் சென்று பரிசோதித்து பார்த்ததில் என் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சக்தியை வளர்த்துக் கொள்ள பூரண ஓய்வும், சிகிச்சையும் தேவை என்று டாக்டர்கள் சொன்னதால் வீட்டில் இரண்டு மாதம் பெட் ரெஸ்ட் எடுத்தேன். இதில் என் முகமும், உடலும் சோர்வடைந்து விட்டது. இந்த நேரத்தில்தான் கடல் வாய்ப்பும் ஐ வாய்ப்பும் வந்தது. நழுவிப்போனது. மிகப்பெரிய இரண்டு வாய்ப்புகள் நழுவிப்போனதால் ரொம்பவே கலங்கிப்போனேன். ஆனாலும் தைரியமாக இருந்தேன். குணமாகி வந்தேன். இப்போது மீண்டும் பிசியாகி விட்டேன். கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பார் என்பதை என் வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்து விட்டேன்.
சமந்தா நீ.... நல்லா வருவம்மா...!!