தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மும்பையில் சிவசேனா தொண்டர்களிடம் நடிகர் விஜய் நடித்து வரும் தங்கமகன் படக்குழுவினர் சிக்கிகொண்டனர். டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் கடந்த சில நாட்களாக நடைபெறுகிறது. இந்த படத்துக்கு, தங்க மகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கிறார்.
மும்பையில், மறைந்த சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரேயை தகனம் செய்த இடத்தில் நினைவு சின்னம் வைக்கக்கோரி, சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். போராட்டக்காரர்கள், தமிழ் படப்பிடிப்பு நடைபெற்ற மைதானத்துக்குள் புகுந்தார்கள். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவிடம் இருந்து போராட்டக்காரர்கள் காமிராவை பறிக்க முயன்றார்கள். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தலையிட்டு, போராட்டக்காரர்களிடம் இருந்து காமிராவை மீட்டார்கள். சம்பவம் நடைபெற்றபோது, விஜய் படப்பிடிப்பில் இல்லை. அவர் சென்னை வந்து விட்டார். சூட்டிங்கிற்காக மீண்டும் சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்ற விஜய், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால், ஹோட்டலிலேயே தங்கியிருக்கிறார். பாதுகாப்பு கருதி, அவரை வெளியில் வரவேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டார்கள்.