இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
"உன்னாலே உன்னாலே படம் மூலம், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சாக்லேட் பாய் வினய். பெங்களூரில் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்த்த இவரை, கோடம்பாக்கத்துக்கு கூட்டி வந்தவர் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா. "ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை, இருவர் உள்ளம் மற்றும் பெயரிடப் படாத இரண்டு, புதிய படங்களில் நடிக்கிறார். "ஏன் இந்த இடைவெளி என, அவரிடம் கேட்டபோது, "உன்னாலே உன்னாலே படத்திற்கு பின், எனக்கு வந்தது எல்லாமே லவ் ஸ்டோரி தான். ஒரே மாதிரியான படங்களில் நடிப்பதை தவிர்த்தேன். என்னை பொறுத்தவரை வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவே, ஆசைப்படுகிறேன். அது தான், சவாலாக இருக்கும். வித்தியாசமான வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. விரைவில், பெங்களூரில் இருந்து, சென்னைக்கு குடியேறப் போகிறேன். இனி நிறைய நல்ல படங்கள் கிடைக்கும் என, நம்பிக்கையுடன் கூறுகிறார், வினய்.