ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடல் படம் மூலம் கார்த்திக்கின் மகன் கவுதம் மற்றும் ராதா மகள் துளசியை அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் மணிரத்னம். கடல் சார்ந்த காதல் கதையாக உருவாக்கி வருகிறார் மணிரத்னம். இதுவரை இந்தபடத்தில் இடம் பெற்ற எந்த நடிகையர்களின் புகைப்படத்தையும் வெளியிடாமல் வைத்திருந்த மணிரத்தினம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த மாத இறுதியில் இசை வெளியீட்டை வெளியிட உள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கார்த்திக் மகன் கவுதம் போட்டோவை வெளியிட்ட மணி, இப்போது ராதா மகள் துளசி போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.
மகள் துளசி பற்றி ராதாவிடம் கேட்டபோது, என் மகள் இப்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். மணி சார் பட வாய்ப்பு வந்ததும், ரொம்ப மகிழ்ச்சியோடு நாங்கள் ஒத்து கொண்டோம். அதே சமயம் படிப்பு பாதிக்காமல் பார்த்து கொண்டோம். மணி சார் படத்தில் துளசி அறிமுகமாவது என்னை விட என் கணவருக்கு தான் ரொம்ப சந்தோஷம். ஏன்னா அவர் மணி சாரின் ரசிகர். நிறைய நாள் ஷூட்டிங்கிற்கு துளசி கூட அவர் தான் சென்றார். எனக்கு, மணி சார் படத்தில் என் மகள் அறிமுகமானது சந்தோஷம் என்றால், கூடுதல் மகிழ்ச்சி கார்த்திக் மகன் கவுதம் ஜோடியாக என் மகள் அறிமுகமாவது. எனக்கு என் பழைய நினைவுகள் தான் ஞாபகம் வந்தது. இது வரை கடல் படத்தில் ஒருசீன் கூட பார்க்கல. மக்களோட மக்களாத்தான் நான் தியேட்டர்ல போய் பார்க்க போகிறேன். அந்த நாளை நினைத்தால் சந்தோஷமாகவும், கொஞ்சம் பயமா கூட இருக்குனு சொல்வேன். என் மகளின் படிப்பு பாதிக்க நாங்க விரும்பல. அதனால் படிப்பு பாதிக்காமல் படங்களை ஒத்துகொள்கிறோம். இப்பொது கடல் படத்திற்கு பிறகு ரவி.கே.சந்திரன் இயக்கும், யான் படத்தில் ஜீவாவுடன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இன்னும் நிறைய டைம் இருக்கு. நல்ல முடிவா அமையட்டும் என்றார்.