டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவில் நடிகையாகி 15 ஆண்டுகளாக ஓயாது உழைத்துக்கொண்டிருப்பவர் தபு. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பரவலாக பல மொழிகளிலும் நடித்து வந்த தபு, இன்றுவரை தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, இந்த மாதிரியான வேடங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று ஒரு வட்டத்துக்குள் நிற்காமல், விலைமாது, பார்கேர்ள் என எந்த மாதிரி வேடங்களிலும் கலந்துகட்டி நடித்தவர் தபு. ஆனால் அப்படிப்பட்டவருக்கு இப்போது நடிப்பு போர் அடித்து விட்டதாம்.
அதன்காரணமாக, இனிமேல் படிப்படியாக நடிப்பை குறைத்துவிட்டு, முழுநேர பாடகியாக உருவெடுக்கப்போகிறேன் என்று கூறி வருகிறார். இப்படியொரு ஆசை என் ஆழ்மனதுக்குள் வந்தபோதே இந்துஸ்தானி சங்கீதத்தை முறைப்படி பயிலத் தொடங்கினேன். இப்போது ஓரளவு தேறி விட்டதால், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் சான்ஸ் கேட்டிருப்பதாக சொல்லும் தபு, அவர்கள் நான் பாடுவதற்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டால், அடுத்தகணமே நடிப்புக்கு நான் ரெட் சிக்னல் காட்டி விடுவேன். அந்த அளவுக்கு 15 வருடங்களாக இரவு பகல் பாராமல் நடித்து எனக்கு இப்போது நடிப்பு மீதே வெறுப்பும், அலுப்பும் தட்டி விட்டது என்கிறார் தபு.