ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெற்றி இயக்குனர் எழில் புதிதாக இயக்கும் படத்திற்கு தேசிங்குராஜா என்று பெயர் சூட்டியுள்ளார். துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி போன்ற நல்ல படங்களை இயக்கியவர் டைரக்டர் எழில். இவர் கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து மனம் கொத்திப் பறவை என்ற படத்தை இயக்கினார்.
இந்நிலையில், இயக்குனர் எழில் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அப்படத்திற்கு தேசிங்கு ராஜா என பெயரிட்டிருக்கின்றனர். விமல், பிந்து மாதவி ஆகியோர் நடிக்கின்றனர். மனம் கொத்திப் பறவை படத்திற்கு இசையமைத்த டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.