'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழகத்தின் அடுத்த தலைமுறை பாடகர்களை தேடும் சரிகமப சாலஞ்ச் 2012 நிகழ்ச்சி, இறுதிச் சுற்றை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் பரத்வாஜ், உன்னிமேனன், ரைஹானா, ஹரிஷ் ராகவேந்திரா, பிரசாந்தினி, மோகன் வைத்தியா உள்ளிட்டவர்களை நடுவர்களாக கொண்டு நடைபெற்று வரும் இப்போட்டி நிகழ்ச்சியில், தற்போது தமிழகம் முழுவதிலுமிருந்து தலை சிறந்த 7 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த 7 போட்டியாளர்களும் கோவை மாநகரில் அமைந்துள்ள பன் ரிபப்ளிக் மாலிலும், 16-ம் தேதி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யு மாலிலும் கலந்து கொள்கிறார்கள். தேர்வாகும் ஐந்து போட்டியாளர்களும் நேரடியாக மக்களின் முன்னிலையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இசை உலகின் ஜாம்பவான்கள் முன்னிலையில் விரைவில் நடைபெறும். இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் போட்டியாளர் ஒருவருக்கு சினிமாவில் பின்னணி பாடும் வாய்ப்பு நிச்சயம். பரபரப்பான தருணத்தை அடைந்திருக்கும் ‘சரிகமப’ நிகழ்ச்சி, வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.