ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எப்போதும் எட்டாக்கனிக்குத்தான் மவுசு அதிகம் என்கிற பாணியை கடைபிடித்து வருபவர் த்ரிஷா. அந்த வகையில், தன்னுடன் எத்தனை படங்களில் நடித்த ஹீரோக்கள் என்றாலும் அவர்களுடன் இடைவெளி விட்டே பழகுவார். படப்பிடிப்பு தளங்களில்கூட மதிய இடைவேளைகளில் அப்படங்களின் இயக்குனர் மற்றும் ஹீரோக்கள் மற்ற கலைஞர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தாலும் இவர் மட்டும் அந்த பக்கம் தலைவைத்துகூட படுக்க மாட்டார். எப்போது டேக் ரெடி என்று அழைப்பு விடுகிறதோ, அப்போதுதான் கேரவனில் இருந்து வெளியே எட்டிப்பார்ப்பார்.
இப்படி கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வந்த த்ரிஷா, இனிமேற் கொண்டு தனது நடவடிக்கைகளில் மாற்றம் காண்பிப்பார் என்பதுதான் அவரது ஆஸ்தான ஹீரோக்கள் சிலரது எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. ஆனால் இப்போதும் த்ரிஷாவிடம் எந்தவித மாற்றமும் இல்லையாம். அதனால் தூரத்தில் நின்றே அவர் மீது ஏக்கப்பார்வை வீசி வருகிறார்கள் இளவட்ட ஹீரோக்கள். இதன்காரணமாக, இயக்குனர்கள் த்ரிஷா பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட் என்று படம் கொடுக்க நினைத்தாலும், நடிகர்களோ, தங்களிடம் சகஜமாக பழகும் அபிமான நடிகைகளுக்கு சிபாரிசு செய்யும் மனநிலைக்கு மாறி வருகிறார்களாம். ஆக, இனிமேல் த்ரிஷா மாறினால்தான் அவருக்கு ஏற்றம் வரும் என்று தெரிகிறது.