தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் ஸ்ரீவித்யா கணபதி கோவில் இருந்தது. இந்த கோவிலில்தான் நடிகர் திலகம் சிவாஜியிலிருந்து ரஜினி வரை வழிபட்டிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
நடிகர் சங்கத்தை இடித்துவிட்டு புதிய கட்டிட வளாகம் கட்ட முடிவெடுத்த பிறகு அங்குள்ள அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட்டன. அதோடு சேர்த்து கோவிலும் இடிக்கப்பட்டது. நடிகர் சங்க வளாகம் இப்போது எதுவும் இல்லாத பொட்டல் காடுபோல காட்சியளிக்கிறது.
கோவிலை இடித்ததுதான் சினிமா உலகில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் அனைத்திற்கும் காரணம் என்கிறார்கள். 25 ஆண்டுகள் பழமையான கோவிலை இடிக்கிற நிலை வந்தால் அதற்கு சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி விட்டார்கள். அதனால்தான் இப்போது நடிகர் சங்கம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. நிலம் தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. குறித்த காலத்திற்குள் கட்டிடப் பணிகள் ஆரம்பிக்க முடியவில்லை. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கலைஞர்களின் மரணம் அதிகரித்திருக்கிறது. சினிமா உலகம் சிக்கலான பிரச்னைகளை சந்தித்து வருகிறது என்கிறார்கள். நடிகர்கள் இணைந்து, இடிக்கப்பட்ட கோவிலைப்போல ஒரு புதிய கோவிலை கட்ட வேண்டும், அல்லது கோவில் இடிப்புக்கான பரிகாரத்தை கோவில் இருந்த இடத்திலேயே செய்தால்தான் தெய்வகுற்றம் விலகி நல்லது நடக்கும் என்கிறார்கள்.
சாமி குத்தம் வராம பார்த்துக்குங்க சாமிங்களா...!