நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
சமீபத்தில் ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் சினேகன் "எனக்கு இரண்டு முறை தேசிய விருது கிடைக்க வேண்டியது. கடைசி நேரத்தில் சிலரின் லாபிகளால் கிடைக்காமல் போனது. முதல் நாள் இரவு விருது உனக்குத்தான் என்று டெல்லியில் இருந்து போன் வரும் மறுநாள் அறிவிப்பில் இன்னொருவர் பெயர் இருக்கும். இந்த சதியை செய்பவர் யார் என்பதும் எனக்குத் தெரியும்" என்று பேசினார். இது பாடலாசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சில பாடலாசிரியர்கள் சினேகனுக்கு போன்போட்டு பாராட்டினார்களாம். சிலர் போட்டு வாங்கினார்களாம். ஒரு பெரிய கவிஞர் நள்ளிரவில் போன்போட்டு "நீ என்னை குறிப்பிட்டுத்தான் பேசியிருக்கேன்னு தெரியும். தேசிய விருதுன்னா சும்மான்னு நினைச்சியா? வெறும் திறமை இருந்தா மட்டும் போதாது. விருதை வாங்க புத்தியையும் கொஞ்சம் பணத்தையும் செலவு பண்ணனும் தம்பி" என்று சொன்னாராம்.