ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.தணிகைவேல் தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். மண் பட இயக்குனர் புதியவன் ராசையாவின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. அஷ்வமித்ரா இசை அமைத்துள்ளார். மகிந்த அபேசிங்கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த படம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 17 விருதுகளை குவித்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய உள்ள பெரும்பாண்மையான கலைஞர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள். புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். தியேட்டரில் அல்லது ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகிறது.