இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அண்ணாத்த'. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என நான்கு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் முடிவுற்றது.
இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ரஜினி. இந்த மருத்துவ பரிசோதனைகளை முடித்து கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வதார் ரஜினி. இந்நிலையில் தற்போது 'அண்ணாத்த' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது.
இந்த படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள பெலிசியா டவர்சில் செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி கலந்துக்கொண்டு நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்போடு ரஜினி தொடர்பாக மொத்த காட்சிகளும் முடிக்கப்பட்டுவிடும்.
இதையடுத்து கோல்கட்டா செல்லும் படக்குழு அங்கு சில காட்சிகளையும், தொடர்ந்து லக்னோவில் சில காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதேநேரம் இந்த இரண்டு நாள் படப்பிடிப்புக்கு பிறகு வரும் 25ம் தேதி முதல் டப்பிங் பணிகளில் ரஜினி கவனம் செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாவது உறுதியாகி உள்ளது.