விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் இதுவரை சந்தியாவுக்கு ஆதரவாக இருந்த அவரது கணவர் சரவணன், தற்போது சந்தியாவை வெறுத்து ஒதுக்க தொடங்கிவுள்ளார்.
சரவணன் தன்னிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று புரியாத சந்தியா கடைக்கு சென்று அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால், சந்தியாவை கடைசி வரை கண்டுகொள்ளாத சரவணன் கஸ்டமர்களை கவனிக்கிறார். அப்போது கடைக்கு கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்த நண்பர் படித்த பெண்ண திருமணம் செய்தால் பிரச்னை. நம்மை மதிக்கமாட்டார்கள். அதனால் நாம் சந்தோஷமாக வாழ முடியாது என்று கூற அதை சரவணனும் ஒத்துக்கொள்கிறார். இதைக்கேட்ட சந்தியா அதிர்ச்சியுடன் வீடு திரும்புகிறார்.
அதன்பின் வீட்டிற்கு வரும் சரவணன் சந்தியாவையும் இனிமேல் சாப்பாட்டு கொண்டு வர வேண்டாம் என்று சொல்கிறார். இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள விரிசலுக்கு காரணம் புரியாமல் தவிக்கும் சந்தியா, சரவணனை எப்படி சமாதான செய்யப் போகிறார் என்ற கேள்வியுடன் இன்றைய எபிசோடு தொடர்கிறது.