டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கில் கொடி நாட்டி விட்டு கோடம்பாக்கத்துக்குள் என்ட்ரி ஆனவர் பிந்து மாதவி. தெலுங்கில் அதிரடி நாயகியாக வேண்டும் என்று களமிறங்கினார் இவர். ஆனால் அவரது வேகத்துக்கு ஈடுகொடுக்கும்படியான படங்கள் அமையவில்லையாம். அதனால் கோடம்பாக்கம் தன்னை தத்தெடுத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கிறார் பிந்து. ஆனால் இங்கே வந்து பார்த்தால் இவர்களுக்கு ஆந்திராவாலாக்கள் எவ்வளவோ மேல் என்றாகி விட்டதாம்.அந்த அளவுக்கு படுகவர்ச்சியான உடையணிந்து நடிக்கிறேன் என்று இவரே முன்வந்தாலும், அதெல்லாம் வேண்டாம். கதை கெட்டுப்போய் விடும் என்று குடும்பப் பாங்கான காஸ்டியூம்களை கொடுத்து அணிந்து வர சொல்கிறார்களாம்.
இப்படி சொல்லும் பிந்துமாதவியிடம், நல்ல விசயம்தானே. இப்படியே நடித்து நல்ல நடிகை என்கிற இமேஜை மெயின்டெயின் பண்ண வேண்டியதானே என்று சொன்னால், இன்றைய காலகட்டத்தில் மூடி மறைத்து நடிப்பவர்களுக்கு மரியாதை இல்லை. டூ-பீஸ் ரேஞ்சுக்கு உடையணிந்து நடித்தால்தான் பெரிய அளவில் ரீச் ஆக முடிகிறது. அதோடு இந்தியா முழுக்க பிரபலமாகலாம். அதனால்தான் அதிரடி கவர்ச்சி நாயகியாக ஆசைப்படுகிறேன். ஆனால் என் துரதிர்ஷ்டம் அந்த மாதிரி நடிகைகளை தோலுரிக்கும் அசைவ இயக்குனர்கள் எனக்கு யாரும் சிக்கவில்லை. அசைவத்தைக்கண்டாலே தூரத்துக்கு அப்பால் ஓடும் சைவப்பிராணிகளே சிக்குகிறார்கள். என்னதான் செய்வது என்று புலம்புகிறார் பிந்து மாதவி.