இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழில் தான் முதலில் அறிமுகமானார். அதற்கு பின், பாலிவுட்டுக்கு சென்ற அவர், அங்கு உச்சத்துக்கு சென்று விட்டார். ஆரம்பத்தில், ஷாருக் கானின் நம்பத் தகுந்த தோழியாக இருந்த பிரியங்கா, சமீபகாலமாக, ஷாருக் கானின் பரம தொழில் விரோதியான, சல்மான் கானுடன், ஜோடியாக வலம் வருகிறார். இத்தனைக்கும், சல்மான் கானுக்கும், பிரியங்காவுக்கும், ஆரம்பத்திலிருந்தே ஆகாது. இப்போது, என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை. இருவரும், இணை பிரியாத நண்பர்களாகி விட்டனர். சமீபத்தில், ஒரு விருது வழங்கும் விழாவுக்காக, துபாய் சென்றிருந்த இந்த ஜோடி, அங்கு ஒரே ஓட்டலில் தங்கியிருந்ததாக வெளியான தகவல், பாலிவுட்டை கலக்கி வருகிறது. செய்தியாளர் சந்திப்பின்போதும், இருவரும் ஒன்றாகவே பேட்டி அளித்தனர். அப்போது, சல்மானை, பிரியங்கா பாராட்ட... பதிலுக்கு, சல்மான், பிரியங்காவை பாராட்ட, அந்த இடமே, பாராட்டு மழையில் நனைந்துவிட்டது. சல்மானின் "குட்புக்கில் பிரியங்கா இடம் பிடித்தது எப்படி என, தெரியாமல், மண்டை காய்ந்து போயிருக்கிறது, ஷாருக் வட்டாரம்.