ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்த் திரையுலகத்தில் பலரும் குரல் கொடுத்து வருகிறார். கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட நடிகர்கள் அது குறித்த தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள்.
திரைப்பட சங்கங்களும் அவர்களது எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் அதிக அளவில் வியாபாரத்தையும், வசூலையும் பெறும் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் இந்த மசோதா குறித்த தங்களது கருத்துக்களை இதுவரை பதிவு செய்யவில்லை.
அவர்கள் இப்படி எந்த ஒரு கருத்தையும் சொல்லாமல் மவுனமாக இருப்பது திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். விஜய் அவருடைய 'பீஸ்ட்' படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அஜித்திற்கு எந்தப் படப்பிடிப்பும் இல்லை, வீட்டில் தான் ஓய்வெடுத்து வருகிறார்.
ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா பற்றி அவர்களுக்கு கண்டிப்பாகப் போய்ச் சேர்ந்திருக்கும். இருந்தாலும் தங்கள் துறை சார்ந்த பிரச்சினைகளுக்குக் கூட அவர்கள் குரல் கொடுக்காமல் அமைதி காப்பது திரையுலகத்தினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சில நடிகர்கள் அவர்களது ஆலோசகர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் திரைப்படங்களில் நடிப்பதையே முடிவெடுப்பார்கள். அது போல, இந்த மசோதா விவகாரத்திலும் அவர்கள் ஆலோசனைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.