‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மலேசியாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி வருகிற 15ம்தேதி நடைபெற உள்ளது. 1997ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன்சங்கர் ராஜா. மன்மதன், பருத்திவீரன், சென்னை 600 028, சரோஜா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி..., போகாதே போகாதே... போன்ற சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.
தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பிரியாணி படத்திற்கு இசையமைத்து வரும் யுவனுக்கு, இது 100வது படமாகும். இதனை கொண்டாடும் வகையில் டிசம்பர் 15ம்தேதி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கிறார் யுவன். இந்த நிகழ்ச்சியில் யுவன், தன்னுடைய குழுவினருடன் சேர்ந்து ரசிகர்களுக்கு நேரடி இசை விருந்து அளிக்கவிருக்கிறார். இந்நிகழ்ச்சிக்காக கோலாலம்பூரில் பிரம்மாண்டமான அரங்கு தயாராகி வருகிறது.
இவ்விழாவில் தனுஷ், கார்த்தி, சிம்பு, ஜீவா, விஷால், ஆர்யா, சினேகா, ஜெயம் ரவி, பிரசன்னா, ஜெய், கிருஷ்ணா உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். பல முன்னணி பாடகர்கள் கலந்து கொண்டு யுவனின் இசைக்கு மேலும் வலுசேர்க்கவிருக்கின்றனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும், யுவனின் அப்பாவுமான இளையராஜா கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சி இசை ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.