ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் இயக்குனர் கே. பாக்யராஜ். இன்றைக்கும் சினிமாவுக்கு வரும் ஒவ்வொரு இயக்குனருக்குமே பாக்யராஜ் மாதிரி ஸ்கிரிப்ட் பண்ண வேண்டும என்பதுதான் நோக்கமாக இருக்கும். அந்த அளவுக்கு பலரை பாதித்தவர் அவர். சுவரில்லாத சித்திரங்கள், மவுனகீதங்கள், அந்த ஏழு நாட்கள், ஒரு கை ஓசை, தூறல் நின்னு போச்சு, இன்று போய் நாளை வா, முந்தானை முடிச்சு. டார்லிங் டார்லிங் டார்லிங், தாவணிக்கனவுகள், இது நம்ம ஆளு என்று வரிசையாக 9 சில்வர் ஜூப்ளி படங்களை கொடுத்தவர் பாக்யராஜ்.
அப்படிப்பட்டவரை வேட்டியை மடிச்சுக்கட்டு படம் சறுக்கி விடவே, அவரது வெற்றிப் பயணத்தில் ஒரு சிறிய தடங்கலாக அமைந்தது. இருப்பினும் அதன்பிறகு சொங்கத்தங்கம், பாரிஜாதம் படங்களை இயக்கிய அவர், கடைசியாக தனது மகன் சாந்தனுவை வைத்து இயக்கிய சித்து ப்ளஸ்டூ என்ற படத்தை இயக்கி ரொம்பவே தடுமாறிப்போனார். அதோடு அவரது நல்ல பெயருக்கும் அப்படம் களங்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சில வருட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் வெற்றிப்படங்களை கொடுப்பேன் என்று வேட்டியை மடிச்சுக்கட்டிக்கொண்டு நிற்கிறார் பாக்யராஜ். அப்படி இவர் இயக்கும் படத்தில் அவரது மகன் சாந்தனு நாயகன் இல்லையாம். பருத்தி வீரன் கார்த்திதான் நாயகனாம். என்னதான் இன்றைய பாணி கதைகளாக படமாக்கும் எண்ணமே இருந்தாலும், அவரது முருங்கைக்காய் டச்சையும் இந்த காலத்திற்கேற்ப ஆங்காங்கே இடம்பெறச்செய்து இன்றைய இளவட்ட ரசிகர்களையும் கிளுகிளுப்பேற்றப்போகிறாராம் பாக்யராஜ்.