கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் இயக்குனர் கே. பாக்யராஜ். இன்றைக்கும் சினிமாவுக்கு வரும் ஒவ்வொரு இயக்குனருக்குமே பாக்யராஜ் மாதிரி ஸ்கிரிப்ட் பண்ண வேண்டும என்பதுதான் நோக்கமாக இருக்கும். அந்த அளவுக்கு பலரை பாதித்தவர் அவர். சுவரில்லாத சித்திரங்கள், மவுனகீதங்கள், அந்த ஏழு நாட்கள், ஒரு கை ஓசை, தூறல் நின்னு போச்சு, இன்று போய் நாளை வா, முந்தானை முடிச்சு. டார்லிங் டார்லிங் டார்லிங், தாவணிக்கனவுகள், இது நம்ம ஆளு என்று வரிசையாக 9 சில்வர் ஜூப்ளி படங்களை கொடுத்தவர் பாக்யராஜ்.
அப்படிப்பட்டவரை வேட்டியை மடிச்சுக்கட்டு படம் சறுக்கி விடவே, அவரது வெற்றிப் பயணத்தில் ஒரு சிறிய தடங்கலாக அமைந்தது. இருப்பினும் அதன்பிறகு சொங்கத்தங்கம், பாரிஜாதம் படங்களை இயக்கிய அவர், கடைசியாக தனது மகன் சாந்தனுவை வைத்து இயக்கிய சித்து ப்ளஸ்டூ என்ற படத்தை இயக்கி ரொம்பவே தடுமாறிப்போனார். அதோடு அவரது நல்ல பெயருக்கும் அப்படம் களங்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சில வருட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் வெற்றிப்படங்களை கொடுப்பேன் என்று வேட்டியை மடிச்சுக்கட்டிக்கொண்டு நிற்கிறார் பாக்யராஜ். அப்படி இவர் இயக்கும் படத்தில் அவரது மகன் சாந்தனு நாயகன் இல்லையாம். பருத்தி வீரன் கார்த்திதான் நாயகனாம். என்னதான் இன்றைய பாணி கதைகளாக படமாக்கும் எண்ணமே இருந்தாலும், அவரது முருங்கைக்காய் டச்சையும் இந்த காலத்திற்கேற்ப ஆங்காங்கே இடம்பெறச்செய்து இன்றைய இளவட்ட ரசிகர்களையும் கிளுகிளுப்பேற்றப்போகிறாராம் பாக்யராஜ்.