மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோயின் அஞ்சலிதான். என்ன கதை, யார் ஹீரோ என்ற எந்த கேள்வியும் கிடையாது. எத்தனை நாள் ஷூட்டிங், எவ்வளவு சம்பளம் இதுதான் கேள்வி. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதை சரியாக புரிந்து கொண்ட அஞ்சலியின் தாய்குலம் போடும் ஒரே கண்டிஷன் சம்பளத்தை ரொக்கமாக முதலிலேயே தரவேண்டும் என்பதுதான். அரைக்கோடியை தாண்டித்தான் இப்போது சம்பளம் கேட்கிறார் தாய்குலம். இதுதவிர அம்மாவும் மகளும் கொடுக்கிற டார்ச்சர்களும் தாங்கவில்லையாம். சேட்டை படத்தின் படப்பிடிப்பின்போது ஹன்சிகா 30 நிமிடத்தில் மேக்போட்டு தயாரானால், அஞ்சலி மேக்அப் போட இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்வாராம். படப்பிடிப்புக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது தாமதமாக வருவாராம். தன்னுடன் ஒரு உதவியாளர் படையையே அழைத்து வருகிறாராம். அவர்கள் அனைவரும் அவரது ஆந்திரா கிராமத்து பண்ணை ஆட்களாம். உதவியாளர்கள் என்ற போர்வையில் பாதுகாவலர்களாக வைத்திருக்கிறாராம். படப்பிடிப்பு முடிந்ததும் அம்மாவும் மகளும் "குடிக்க" உயர்ரக ஜூஸ் கொடுக்க வேண்டுமாம். வளர்ற பொண்ணுக்கு இதெல்லாம் அழகா என்று கேட்கிறார்கள் அனுபவம் வாய்ந்த சில துணை நடிகைகள்.