சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
ஆர்யாவுக்கான கதையில் நான் நடித்தது பற்றி ஆர்யா ஒன்றும் கேட்க மாட்டான். ஏன் என்றால் அவன் மானஸ்தன் என்று கூறியுள்ளார் நடிகர் விஷால். வெடி படத்திற்கு நடிகர் விஷால் நடித்துள்ள படம் சமர். திரு இயக்கியுள்ள இப்படத்தில் விஷால் ஜோடியாக த்ரிஷாவும், சுனைனாவும் நடித்துள்ளனர். மலையேறும் பயிற்சி தருபவராக இருக்கும் சக்தி என்ற விஷால் ஒரு விஷயமாக பாங்காக் செல்ல அங்கு அவருக்கு ஏற்படும் பிரச்னைகள் தான் படத்தின் கதை. முதன்முறையாக விஷால் இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் படமாக சமர் உருவாகியுள்ளது. படத்தின் பெரும்பகுதி பாங்காக்கில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் பேசிய விஷால், சமர் படத்தின் கதையை ஆர்யாவுக்குத்தான் டைரக்டர் திரு உருவாக்கினார். ஆனால் கதை பிடித்து போனதால் நானே நடித்து விட்டேன். அவனுக்காக உருவாக்கிய கதையில் நான் நடித்ததால் அவன் நிச்சயம் கோபப்பட மாட்டான். அதைப்பற்றி ஒரு கேள்வி கூட கேட்கமாட்டான். ஏன் என்றால் அவன் மானஸ்தன். அவன் இவன் உள்ளிட்ட படங்கள் முதற்கொண்டு என்னுடைய வளர்ச்சியில் ஆர்யாவின் பங்கு முக்கியமாக இருக்கிறது என்று பேசினார்.