Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

ஆர்யா மானஸ்தன் சொல்கிறார் விஷால்!

Vishal at samar press meetஆர்யாவுக்கான கதையில் நான் நடித்தது பற்றி ஆர்யா ஒன்றும் கேட்க மாட்டான். ஏன் என்றால் அவன் மானஸ்தன் என்று கூறியுள்ளார் நடிகர் விஷால். வெடி படத்திற்கு நடிகர் விஷால் நடித்துள்ள படம் சமர். திரு இயக்கியுள்ள இப்படத்தில் விஷால் ஜோடியாக த்ரிஷாவும், சுனைனாவும் நடித்துள்ளனர். மலையேறும் பயிற்சி தருபவராக இருக்கும் சக்தி என்ற விஷால் ஒரு விஷயமாக பாங்காக் செல்ல அங்கு அவருக்கு ஏற்படும் பிரச்னைகள் தான் படத்தின் கதை. முதன்முறையாக விஷால் இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் படமாக சமர் உருவாகியுள்ளது. படத்தின் பெரும்பகுதி பாங்காக்கில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் பேசிய விஷால், சமர் படத்தின் கதையை ஆர்யாவுக்குத்தான் டைரக்டர் திரு உருவாக்கினார். ஆனால் கதை பிடித்து போனதால் நானே நடித்து விட்டேன். அவனுக்காக உருவாக்கிய கதையில் நான் நடித்ததால் அவன் நிச்சயம் கோபப்பட மாட்டான். அதைப்பற்றி ஒரு கேள்வி கூட கேட்கமாட்டான். ஏன் என்றால் அவன் மானஸ்தன். அவன் இவன் உள்ளிட்ட படங்கள் முதற்கொண்டு என்னுடைய வளர்ச்சியில் ஆர்யாவின் பங்கு முக்கியமாக இருக்கிறது என்று பேசினார்.

Tags »
Vishal, Arya, Samar, Press Meet, விஷால், ஆர்யா, சமர், பிரஸ் மீட்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

R.Saminathan - mumbai,இந்தியா
2013-03-04 12:51:23 Report Abuse
R.Saminathan இந்த உலகில் என்றும் எப்போதும் நட்பு சாகாது,,.உங்க நட்புக்கு எனது வாழ்த்துக்கள்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in