தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுங்கு சினிமா நடிகர் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் கன்னடர் அவர் எப்படி தெலுங்கு நடிகர் சங்கத்தில் போட்டியிட முடியும் என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய பிரகாஷ்ராஜ், தெலுங்கரான விஷால் தமிநாட்டில் உள்ள நடிகர் சங்கத்தின் தலைவராகும்போது நான் இங்கு தலைவராக முடியாதா? என்று கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நான் தெலுங்கில் நடிக்க வரும்போது யாரும் நான் வெளி மாநிலத்தவன் என்று சொல்லவில்லை. நான் இங்கே, சொத்துக்களை வாங்கியிருக்கிறேன். எனக்கு இங்கேயே வீடும் உள்ளது. எனது ஆதார் கார்டும் ஆந்திரா முகவரியில் தான் உள்ளது. எனது பிள்ளை இங்கேதான் படிக்கிறான். நான் ஆந்திராவில் 2 கிராமங்களைத் தத்தெடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் யாரும் நான் வெளிமாநிலத்தவன் என்று சொல்லவில்லை.
தெலுங்கு பேசும் விஷால் தமிழ்நாட்டில் நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு ஜெயிக்கிறார் என்கிறபோது நான் ஏன் இங்கு போட்டியிடக் கூடாது? அந்தப்புரம் என்ற தெலுங்கு படம் தானே எனக்கு தேசிய விருது வாங்கித் தந்தது. தெலுங்கு படங்களில் நடித்துத்தானே 9 நந்தி விருதுகளை வாங்கினேன்.
30 ஆண்டு காலமாக நான் சினிமாவில் இருக்கிறேன். எனக்குப் பெயர், புகழ், பணம் எல்லாத்தையுமே தந்தது சினிமா தான். இதற்காக நான் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? அதனால் தான் இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன்.
நான் தெலுங்கு மண்ணில் வாழ்கிறேன். தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். அதனால் இந்தச் சங்கத்தில் போட்டியிடுகிறேன். என்னை யாரும் வெளி மாநிலத்தவனாக பார்க்கவும் கூடாது. பார்க்கவும் முடியாது. என்றார்.