தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழைப்பொறுத்தவரை டைரக்டர் ஏ.எல்.விஜய்யுடன் மட்டுமே கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் அமலாபால். ஆனால் ஆந்திராவில் அங்குள்ள பிரபல நடிகர்கள் பலருடனும் அவரை இணைத்து தினம் தினம் கிசுகிசுக்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறதாம். ஆனால் எந்த நடிகர்களுடன் அதிகப்படியான நெருக்கத்தை வைத்துக்கொள்வதில்லையாம் அமலாபால். அதனால் இந்த மாதிரி செய்திகள் எப்படி வெளியாகிறது? என்பதை விசாரித்தபோது, அமலாவை பகைத்துக்கொண்டு சென்ற சில எடுபிடிகளே இந்த மாதிரியான செய்திகளை பரப்பி விட்டது தெரியவந்திருக்கிறது.
இதனால் உஷாராகி விட்டார் நடிகை, இப்போது தன்னைச்சுற்றி ஆந்திராவைச்சேர்ந்தவர்கள் இருப்பது தனக்கு ஆபத்து என்று நினைக்கிறார். அதன்காரணமாக, தனது மேனேஜர் தொடங்கி அனைத்து உதவியாளர்களையும் தனது சொந்த மாநிலமான கேரளாவிலிருந்து கொண்டு வந்து வேலை கொடுத்திருக்கிறார். அதில் சிலர் அமலாவின் உறவினர்களாம். இதையடுத்து, இனி தன்னைப்பற்றி தேவையில்லாத வதந்திகள் வெளியாக வாய்ப்பில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் அமலாபால்.