ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழைப்பொறுத்தவரை டைரக்டர் ஏ.எல்.விஜய்யுடன் மட்டுமே கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் அமலாபால். ஆனால் ஆந்திராவில் அங்குள்ள பிரபல நடிகர்கள் பலருடனும் அவரை இணைத்து தினம் தினம் கிசுகிசுக்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறதாம். ஆனால் எந்த நடிகர்களுடன் அதிகப்படியான நெருக்கத்தை வைத்துக்கொள்வதில்லையாம் அமலாபால். அதனால் இந்த மாதிரி செய்திகள் எப்படி வெளியாகிறது? என்பதை விசாரித்தபோது, அமலாவை பகைத்துக்கொண்டு சென்ற சில எடுபிடிகளே இந்த மாதிரியான செய்திகளை பரப்பி விட்டது தெரியவந்திருக்கிறது.
இதனால் உஷாராகி விட்டார் நடிகை, இப்போது தன்னைச்சுற்றி ஆந்திராவைச்சேர்ந்தவர்கள் இருப்பது தனக்கு ஆபத்து என்று நினைக்கிறார். அதன்காரணமாக, தனது மேனேஜர் தொடங்கி அனைத்து உதவியாளர்களையும் தனது சொந்த மாநிலமான கேரளாவிலிருந்து கொண்டு வந்து வேலை கொடுத்திருக்கிறார். அதில் சிலர் அமலாவின் உறவினர்களாம். இதையடுத்து, இனி தன்னைப்பற்றி தேவையில்லாத வதந்திகள் வெளியாக வாய்ப்பில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் அமலாபால்.