தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தாலும், இன்னும் சிலருக்கு வெளியில் செல்ல பயமாகத்தான் இருக்கிறது. ஒரு சில சினிமா பிரபலங்கள்தான் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார்கள், சிலர் தயாராகி வருகிறார்கள்.
நடிகை ஆண்ட்ரியா கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன்பின் கொரானோவிலிருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது என சிறப்பான பத்து ஆலோசனைகளையும் சொன்னார்.
ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து அவருக்கும் போரடித்துவிட்டது போலிருக்கிறது. நேற்று அசத்தலான காஸ்ட்யூம் ஒன்றை அணிந்து சில புகைப்படங்களையும், வீடியோவையும் பதிவிட்டு, “டிரஸ் பண்ணியாச்சி, ஆனா, எங்க போறது,” எனக் கேட்டிருந்தார்.
ஜுலை மாதத்திலிருந்து தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தினரிடம் உள்ளது. அதுவரையிலும் ஆண்ட்ரியா வீட்டில் தான் அடைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஐதராபாத்தில் அவருடைய படத்தின் படப்பிடிப்பை இப்போதே ஆரம்பிக்கச் சொல்ல வேண்டும்.
தற்போது தமிழில், “அரண்மனை 3, நோட் என்ட்ரி, வட்டம், மாளிகை, பிசாசு 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.