'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் குணசித்ர வேட்களில் நடித்திருப்பவர் கவிதா. 1976ம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், அந்தமான் காதலி, அல்லி தர்பார், நாடோடி தென்றல், வைதேகி கல்யாணம், நட்சத்திர நாயகன், செந்தமிழ் பாட்டு என பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறர். கங்கா, நந்தினி தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகை கவிதாவின் வாழ்க்கையில் இது மிகவும் சோகமான காலமாகிவிட்டது. கொரோனா ஊரடங்கு தொடங்கியதுமே படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். என்றாலும், கவிதாவின் மகன் சாய் ரூப், கணவர் தசரத ராஜ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிதாவின் மகன் சாய் ரூப் மரணமடைந்தார். அவரது கணவர் தசரதராஜ் தீவிர சிகிச்சையில் உள்ளார். மகன் மரணம், கணவர் கவலைக்கிடம் என்கிற நிலையில் சின்னத்திரையுலகினர் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.