ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வசந்த் இயக்கி வரும் படம் "மூன்று பேர் மூன்று காதல்" இதில் அர்ஜுன், விமல் உட்பட மூன்று ஹீரோக்களும், சுர்வின், லாசினி, முக்தாபானு என மூன்று ஹீரோயின்களும் நடிக்கிறார்கள், குறிஞ்சி, மருதம், நெய்தல் என மூன்று நிலபரப்புகளில் நடக்கும் மூன்று கதைகள் இணைந்த படம். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. அதற்கு முன் படத்தில் தொடர்புடைய அனைவரும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அதில் பேசிய பாடலாசிரியர் நா.முத்துகுமார் "வசந்த் என்னிடம் கதை சொல்லவில்லை பாடலுக்கான சூழ்நிலையை மட்டும் சொன்னார்" என்று குறிப்பிட்டார். நடிகை பானுவும் "வசந்த் ரொம்பவே கோபக்காரர் என்று பயமுறுத்தினார்கள், முதல் நாள் போட்டோ ஷூட்டின்போதே அவரது திட்டை தாங்க முடியாமல் அழுதுவிட்டேன்" என்றார். கடைசியாக பேசிய அர்ஜுனும் "கதையை வசந்த் சொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்" என்றார்.
பின்னர் பேச வந்த வசந்த், "இவர்கள் என்னை கோபக்காரன், கதை சொல்லாதவன் என்று சொன்னார்கள். அதெல்லாம் காமெடிக்காக சொன்னார்கள். கதை கேட்காமல் எப்படி நடிக்க முடியும், பாட்டு எழுத முடியும், நான் கோபக்காரனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். காலையில் சீன் பேப்பரோடு போகிறோம். அதை சீனாக திருப்பிக் கொண்டு வரவேண்டும் என்ற டென்ஷன் இருக்கும். அதற்கு இடையூறாக ஏதாவது நடந்தால் கோபம் வரத்தானே செய்யும், இன்று கோபப்பட வேண்டும் என்று யாரும் குளித்து விட்டு கிளம்புவதில்லை" என்றார். அப்போது ஒரு நிருபர் குறுக்கிட்டு "நீங்கள் கதை சொல்வதில்லை என்று ஒரு நடிகர் சொன்னாரே?" என்று கேட்க அதற்கு கோபப்பட்ட வசந்த், அந்த நடிகரை மைக் அருகில் அழைத்து "நான் உங்களுக்கு கதை சொல்லவில்லையா?" என்று கோபமாக கேட்க மைக்கை பிடித்த அந்த நடிகர் "நான் நடிக்கும் பகுதியின் கதையை மட்டும் சொன்னார்" என்று சமாளித்தார். நா.முத்துகுமார் மீண்டும் மைக் முன் வந்து "கதையின் அவுட் லைனை என்னிடம் சொல்லியிருக்கிறார்" என்று சமாளித்தார். அர்ஜுனிடம் "உங்களுக்கு கதை தெரியுமா?" என்று வசந்த் கேட்க அவர் "தெரியாது" என்று சொல்ல வசந்த் அதிர்ச்சி அடைந்தார். இப்படி வெளியில் சிரிப்பும், உள்ளுக்குள் கோபமுமாய் முடிந்தது அந்த நிகழ்ச்சி.