பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ், தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை தெலுங்கு மக்கள் நீண்ட நாட்களாக வைத்து வருகின்றனர். சமீபத்தில் கூட சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி அது பற்றிய கோரிக்கையை வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தன்னுடைய 61வது பிறந்தநாளைக் கொண்டாடிய என்டிஆரின் மகனும், நடிகரும், எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா டிவி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அரசியல், சினிமா பற்றி பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
என்டிஆருக்கு பாரத ரத்னா விருதுக்கான கோரிக்கை பற்றி அவரிடம் கேட்ட போது, “எனது அப்பா ஒரு போதும், அதிகாரத்துக்காகவோ, விருதுகளுக்காகவோ ஏங்கியதில்லை. எனது அப்பாவுக்கு பாரத ரத்னா விருது அறிவித்தால், யார் அது பற்றி முடிவெடுக்கிறார்களோ, அவர்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும். ஆனால், அவர் மக்களிடம் பெற்ற அன்போடு ஒப்பிடும் போது இதெல்லாம் ஒன்றுமில்லை,” என கோபமாகப் பேசினார்.
என்டிஆர் மறைந்து 25 வருடங்களாகிவிட்டது. சிலருக்கு மறைவுக்குப் பின்புதான் பாரத ரத்னா வழங்கப்பட்டது. என்டிஆர் மறைந்து இத்தனை வருடங்கள் ஆனாலும் அவரை விருதுக்காக பரிசீலிக்கவில்லை என்ற கோபம் தெலுங்குத் திரையுலகத்தினரிடம் அதிகமாக உள்ளது.