Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பாதியில் நிற்கும் சரத்குமார் படம்!

01 டிச, 2012 - 13:47 IST
எழுத்தின் அளவு:

பல வருடங்களுக்கு முன்பு திரிசக்தி சுந்தர்ராமன் என்ற தயாரிப்பாளர் சரத்குமாரை வைத்து ஒரு படம் தயாரிக்க அவருக்கு 40 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தாராம். ஆனால் பல ஆண்டாகியும் படம் எதுவும் தயாரிக்கவில்லை. தயாரிப்பாளர் அட்வான்சை திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார். அவரை அழைத்த சரத்குமார் "பேசிய படி நாம் சேர்ந்து படம் செய்யலாம்" என்று சொன்னார். இயக்குனர் யார் என்று கேட்டார் தயாரிப்பளார் தன் அருகில் இருந்த செல்வராஜ் என்பரை காட்டினார் சரத்குமார். (செல்வராஜ் தயாரிப்பாளர் சங்கத்தில் சரத்குமாருக்கு உதவியாளர் போன்று செயல்படுபவர்) தயாரிப்பாளர் தயங்கினார். அதைப் புரிந்து கொண்ட சரத்குமார் "பயப்படாதீங்க இவர் நல்ல இயக்குனர்தான். படத்துக்கு நான் பொறுப்பு நீங்க ஆரம்பிங்க" என்றார். அதன்படி ஆரம்பிக்கப்பட்டது விடியல் என்ற படம். 1940, 1980, 2012 என மூன்ற காலகட்ட கதையை கொண்ட படம். முதல்கட்ட படப்பிடிப்பு ஒரு மாதம் குற்றாலத்திலும், மதுரை திருமலை நாயக்கர் மகாலிலும் நடந்தது. சரத்குமாரும், சினேகாவும் கலந்து கொண்டு நடித்தார்கள். அடுத்த கட்ட படப்பிடிப்பு 1940ல் நடக்கும் கதைக்கானது. இதில் சரத்குமாருக்கு ஜோடியாகவும், ரவிக்கை இல்லாமலும் நடிக்க ஒரு நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார்கள். கிடைக்கவில்லை. தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து 6 மாதத்துக்கு மேலாகியும் 2ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவில்லை. இனி இந்தப் படம் உருவாகாது டிராப் ஆகிடும் என்று சொல்கிறார்கள். அதற்கான காரணங்கள் இவை...

1.தயாரிப்பாளர் தற்போது பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் அவரால் படத்தை தொடர முடியாது.

2.சரத்குமாருன் 1940 எபிசோடில் ரவிக்கை இல்லாமல் நடிக்க நடிகை கிடைக்கவில்லை

3.எடுத்தவரை போட்டுப் பார்த்தில் தயாரிப்பாளருக்கு படம் திருப்பதி தரவில்லை.

இந்த காரணங்களில் எது உண்மை என்று தெரியவில்லை.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sivakumar - tirupur  ( Posted via: Dinamalar Android App )
01 டிச, 2012 - 16:53 Report Abuse
sivakumar இந்த படம் வரும் ஆநா வராது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in