மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சமீபத்தில் சமந்தா நடித்த ‛‛தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ், ஈழத்தமிழர்களை மிகவும் மோசமாக சித்தரித்திருப்பதாக தமிழ் ரசிகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்துக்கு ஆளானது. இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்தது குறிப்பாக இதில் நடித்த சமந்தாவும் இந்த கண்டனங்களுக்கு தப்பவில்லை.
இந்த நிலையில் பின்னணி பாடகி சின்மயி சமந்தாவின் நடிப்பை பாராட்டி, சமந்தா ஒரு ராக்ஸ்டார் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதனால் தற்போது தமிழ் உணர்வாளர்களின் கோபம் சின்மயி மீதும் திரும்பியுள்ளது. அதைத்தொடர்ந்து அவரும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதையடுத்து தனது சோசியல் மீடியாவில், விரக்தி கலந்த கோபத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார் சின்மயி அதில், ”ஒருத்தரை பாராட்டி பதிவிட்டதற்காக இவ்வளவு துவேஷமா? இவ்வளவு கோபமா..? எனக்கு தெரிந்த ஒரு நபரை, நான் பலமுறை பாராட்டிய ஒரு நபரை பாராட்டுவதற்கு உரிமை இல்லையா? தயவு செய்து என்னை தனியாக விடுங்கள்.. நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்வதற்கும் ஒரு எல்லை இருக்கிறது” என்று கூறியுள்ளார் சின்மயி.