Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆண்களால் நிம்மதி இழந்து விட்டேன்-நயன்தாரா!

30 நவ, 2012 - 17:06 IST
எழுத்தின் அளவு:

ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் கேரள நடிகையான நயன்தாரா.அதன்பிறகு சிம்புவுடன் வல்லவன் படத்தில் ஜோடி சேர்ந்தார். அப்போதிலிருந்தே அவர்களுக்கிடையே கசமுசா நட்புகள் தொடர்ந்தது. இதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றுகூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளேயே அவர்களது உறவில் விரிசல் விழுந்தது. அதையடுத்து வில்லுவில் நடித்தபோது அப்படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் நட்பாகி பின்னர் அவரையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தார் நயன்தாரா.

இதன்காரணமாக தனது காதல் மனைவியைகூட விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும் அவருக்காக தனது கிறிஸ்தவ மதத்தில் இருந்து விலகி இந்துவாக மாறினார். இந்தநிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்லிக்கொண்டே ஓரிரு வருடங்களை நகர்த்தினர். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கிடையே என்ன நடந்ததோ, நயன்தாராவை விட்டு பிரிந்தார் பிரபுதேவா. இதனால் கடும் அதிர்ச்சியடைந்தார் நயன். சில மாதங்கள் தனது தாய்வீடான கேரளா சென்று புலம்பிக்கொண்டிருந்தார். அதையடுத்து மீண்டும் கலையுலகம் அழைப்பு விடுக்கவே, தெலுங்கு, தமிழ் என்று பிசியான நடிகையாகி விட்டார் அம்மணி.

இந்த சமயத்தில் எப்போது யாரை திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்? என்று மீடியாக்கள் கேட்கும் கேள்விக்கு, ஆண்களால் நிம்மதி இழந்து விட்டேன். அதனால் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழப்போகிறேன் என்று பதிலுரைத்து வருகிறார் நயன்தாரா. 

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

nelmainthan - Almati,ரஷ்யா
25 ஏப், 2013 - 18:52 Report Abuse
nelmainthan onnum theriyatha pappa kannala pottatalam thappa
Rate this:
கார்த்திக் - Bangalore,இந்தியா
11 பிப், 2013 - 00:22 Report Abuse
 கார்த்திக் Nayan, you are so beautiful
Rate this:
மந்தாகினி - kochchi ,இந்தியா
18 ஜன, 2013 - 18:57 Report Abuse
 மந்தாகினி ஏம்மா ஆண்களா வந்து உரசினார்களா
Rate this:
MOHAN - coimbatore,இந்தியா
07 ஜன, 2013 - 14:50 Report Abuse
 MOHAN நான் இருக்கும் போது நீ ஏன் கவலை படனும் ,ப்ளீஸ் ட்ரை மீ ,நான் உன்னை கலட்டி விட மாட்டேன்
Rate this:
DR . Rahman - Kothagiri,இந்தியா
03 ஜன, 2013 - 11:32 Report Abuse
 DR . Rahman தயவு செய்து இந்த மாதிரி பெண்களுக்கு பக்கங்களை வீனக்கதீர் !
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in