‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் கேரள நடிகையான நயன்தாரா.அதன்பிறகு சிம்புவுடன் வல்லவன் படத்தில் ஜோடி சேர்ந்தார். அப்போதிலிருந்தே அவர்களுக்கிடையே கசமுசா நட்புகள் தொடர்ந்தது. இதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றுகூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளேயே அவர்களது உறவில் விரிசல் விழுந்தது. அதையடுத்து வில்லுவில் நடித்தபோது அப்படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் நட்பாகி பின்னர் அவரையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தார் நயன்தாரா.
இதன்காரணமாக தனது காதல் மனைவியைகூட விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும் அவருக்காக தனது கிறிஸ்தவ மதத்தில் இருந்து விலகி இந்துவாக மாறினார். இந்தநிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்லிக்கொண்டே ஓரிரு வருடங்களை நகர்த்தினர். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கிடையே என்ன நடந்ததோ, நயன்தாராவை விட்டு பிரிந்தார் பிரபுதேவா. இதனால் கடும் அதிர்ச்சியடைந்தார் நயன். சில மாதங்கள் தனது தாய்வீடான கேரளா சென்று புலம்பிக்கொண்டிருந்தார். அதையடுத்து மீண்டும் கலையுலகம் அழைப்பு விடுக்கவே, தெலுங்கு, தமிழ் என்று பிசியான நடிகையாகி விட்டார் அம்மணி.
இந்த சமயத்தில் எப்போது யாரை திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்? என்று மீடியாக்கள் கேட்கும் கேள்விக்கு, ஆண்களால் நிம்மதி இழந்து விட்டேன். அதனால் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழப்போகிறேன் என்று பதிலுரைத்து வருகிறார் நயன்தாரா.