ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரன், சண்டக்கோழி, பையா என மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் அடுத்து அவர் இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி-2 படங்கள் தோல்வியை தழுவின. இந்தநிலையில் தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவரான ராம் பொத்திநேனி என்பவரை வைத்து தெலுங்கிலேயே புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் லிங்குசாமி.
ஆக்சன் படமாக உருவாகும் இந்தப்படத்திற்காக, வலுவான வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ள லிங்குசாமி, அதில் நடிகர் மாதவனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. மாதவனின் திரையுலக பயணத்தில் கமர்ஷியல் அந்தஸ்து கொடுத்து அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது லிங்குசாமி இயக்கிய ரன் படம் தான். அதை தொடர்ந்து லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்திலும் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார் மாதவன்.
லிங்குசாமியின் நட்புக்காக வில்லனாக நடிக்க ஒப்புக்கொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.