ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அங்காடி தெரு மகேசுக்கு அதன் பிறகு பெரிய படங்கள் எதுவும் அமையவில்லை. அமைந்த படங்களும் அட்டர் பிளாப். இப்போது அவர் நம்பிக் கொண்டிருக்கும் ஒரே படம் சித்தன். இது அமீர் உதவியாளர் துரைவாணன் இயக்கும் படம். நிரஞ்சனா என்ற புதுமுகம் ஜோடி. மதுரையில் நடக்கும் கதை. மதுரையில் உள்ள குடிசைப்பகுதியில் வாழும் மகேஷ் அந்த பகுதிக்கே நல்ல பிள்ளை. யார் எது சொன்னாலும் கேட்குற பிள்ளை. அவருக்கும் நிரஞ்சனாவுக்கும் காதல் வருகிறது. அது கூடவே பிரச்சினைகளையும் கொண்டு வருகிறது. ஊருக்கு நல்ல பிள்ளையாக திரிந்தவன், காதலால் ஊரே ஒதுக்கி வைக்கும் சித்தன் ஆகிறான். காதல் அப்படி என்ன செய்தது என்று ஆராய்ச்சி செய்வதுதான் திரைக்கதையாம். படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறதாம்.