இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தென்னிந்தியத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகிலும் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடியவர் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்.
கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதற்குப் பிந்தைய பாதிப்புகளால் உடல்நலம் குறைந்து செப்டம்பர் 25ம் தேதியன்று மரணம் அடைந்தார். அவரது மறைவால் கோடிக்கணக்கான ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். அவரது மறைவு பலரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அன்று அவருடைய பாடல்களைப் பற்றி பலரும் பல விதங்களில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர் மீதான தங்களது அபிமானத்தை வெளிப்படுத்தினார்கள்.
அவர் மரணமடைந்த பிறகு வரும் முதல் பிறந்த நாள் இன்று. அவர் மறைந்தாலும் அவரது குரலால் வசீகரிக்கப்பட்ட அத்தனை ரசிகர்களும் இன்று அவரைப் பற்றிய தங்கள் நினைவுகளை மேலும் பகிர்ந்து அவரைப் பற்றிய நினைவுகளை சமூக வலைத்தளங்களில் மீண்டும் பதிவிட்டு வருகிறார்கள். பல சினிமா பிரபலங்களும் அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
மறைந்த பின்னும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைக் கலைஞர்கள் ஒரு சிலரே. அதில் எஸ்பிபியும் ஒருவர் என்பது அவரது குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சியைத் தரும் என்பது உண்மை.