டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
‛‛குற்றம் செய்தவரை விட்டு விட்டு, பள்ளியை குறி வைப்பது ஏன்?'' என, நடிகர் விஷாலுக்கு, பா.ஜ., நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த விசாரணையை போலீசார் தீவிரமாக்கியுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் விஷால் டுவிட்டரில், ‛இந்த விஷயம் என்னை பயமுறுத்துகிறது. பத்மா சேஷாத்ரி பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்' என, பதிவிட்டார்.
விஷாலின் இப்பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகையும், பா.ஜ., நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் அளித்த பேட்டி: பெண்களுக்கான பாலியல் குற்றங்களுக்கு, குரல் கொடுப்பதில் நான் முன் வந்து நிற்பேன். எனக்கும் அந்த பள்ளிக்கு எந்த உறவும் இல்லை. நான் கேட்பதெல்லாம், குறிப்பிட்ட நபரின் குற்றச் செயல்களுக்கு, அப்பள்ளியை முன்னிருத்துவது ஏன்?
விஷாலின் டுவிட்டர் பதிவில், குற்றவாளியின் பெயரை விட்டுவிட்டு, அப்பள்ளியின் பெயரை மட்டும் பதிவிடுகிறார். அவர் மட்டுமல்ல பலரும் அப்பள்ளியையே குறி வைக்கின்றனர். இது குறிப்பிட்ட நபர் மீதான புகார் என்பதையும் தாண்டி, ஒரு சமூகத்தை முடக்கப்பார்க்கும் செயலாகவே தெரிகிறது.
இதுபோன்ற நடவடிக்கை அப்பள்ளியில் பயிலும், பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். திரையுலகில் ஒரு நடிகைக்கு பாலியல் தொல்லை நேர்ந்தால் அதற்காக சினிமாவையே விஷால் முடக்கி விடுவாரா? முதலில் விஷால், சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறத்தல்களை கண்டித்து தடுக்க வேண்டும். சினிமாவில் பெண்கள் உதவி நாடி வந்த போது, அங்கு விஷால் ஹிரோயிசத்தை காட்டியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.