Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐ-பாட் தூக்கிப் போட்டு புத்தகம் படியுங்கள் - ஆண்ட்ரியா ஆலோசனை

31 மே, 2021 - 13:16 IST
எழுத்தின் அளவு:
Replace-the-I-pad-with-storybooks-says-Andrea

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. அவ்வப்போது நல்ல பதிவுகளை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார். அதன்பின் கொரோனாவை சமாளிக்க சில நல்ல ஆலோசனைகளைச் சொன்னார்.

இன்றும் ஒரு நல்ல ஆலோசனையைச் சொல்லியிருக்கிறார். “இன்றைய பதிவு புத்தகங்கள், புத்தகங்கள், மேலும் புத்தகங்கள் பற்றியது. நான் சிறுமியாக இருந்த போது புத்தகங்களுக்கு இடையில்தான் எனது மூக்கு புதைந்திருக்கும். எனது பெற்றோர்கள் எப்போதாவது ஒரு முறைதான் சினிமாவுக்கு கூட்டிச் செல்வார்கள். எனவே, புத்தகங்களை வாசிப்பது என்பதுதான் உலகத்திற்கு அப்பால் இருப்பதைக் கண்டுபிடிக்கும் வழியாக இருந்தது,” என அவர் வாசித்த சில புத்தகங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களின் மொழிமாற்றத்தை இப்போதுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன். அதை வல்லமை மிக்க 'பொன்னியின் செல்வன்' புத்தகத்திலிருந்து ஆரம்பித்துள்ளேன்.

இங்குள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஐ-பாட்களை மாற்றிவிட்டு கதைப் புத்தகங்களைக் கொடுங்கள். ஒரு குழந்தையின் கற்பனை வளத்தை புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் பண்படுத்த முடியாது. புத்தகங்களைத் தேர்வு செய்வதும், படிப்பதும் ஒரு போதும் தாமதமாகாது.

அடுத்தவர்களின் வாழ்க்கையில் நுழைந்து என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதை விட அதற்குப் பதிலாக புத்தகங்களுக்குள் நம் மூக்கை நுழைத்துக் கொள்வது இந்த உலகத்தையும் சிறப்பாக்கும்,” என்று குறிப்பிட்டுளளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'இந்தியன் 2' பஞ்சாயத்து : ஒதுங்கிவிட்ட கமல்ஹாசன் ?'இந்தியன் 2' பஞ்சாயத்து : ... ஆஸ்கர் விருது விழா தள்ளி வைப்பு ஆஸ்கர் விருது விழா தள்ளி வைப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in