ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
கடந்த சில தினங்களாகவே சென்னை கே.கே.நகரில் தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்திற்கு பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஷால் தனது டுவிட்டரில், ‛‛இந்த விஷயம் என்னை பயமுறுத்துகிறது. அந்த பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அதோடு, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் இன்னும் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் எனது நண்பரும், அமைச்சருமான அன்பில் பொய்யா மொழியிடம் இதற்கு பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க சொல்வேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில், சினிமாத்துறையை சார்ந்தவரான நீங்கள் அங்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களையும் முதலில் கண்டியுங்கள். புதிதாக இத்துறைக்குள் நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். பெண் முன்னணி நடிகைகள் மீதான துன்புறுத்தலைப் பாருங்கள். பயன்படுத்தி தூக்கி எறிய, நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரே இடத்திலிருந்து வருகிறீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சினிமாத்துறையில் உள்ள பெண்கள் உங்களிடம் உதவியை நாடியபோது நீங்கள் உங்கள் ஹீரோயிசத்தை காட்டியிருக்க வேண்டும். உங்களைப் போன்றோரின் அணுகுமுறைகளைப் பார்த்துதான் பெண்கள் உங்களை கண்டு ஓடுகிறார்கள். முதலில் யதார்த்தத்தை பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.