பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் புஷ்பா. செம்மர கடத்தல் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிப்பதற்காக, முதலில் விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பிறகு, அவர் விலகிக்கொள்ள, பாபிசிம்ஹா அதில் நடிப்பதாக பேச்சு அடிபட்டது. இந்தநிலையில் அந்த கதாபாத்திரத்தின் பஹத் பாசில் நடிக்கிறார் என கடந்த மாதம் உறுதியானது.
சில வருடங்களுக்கு முன்பு. ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் சிலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வருகிறது. இதில் வில்லத்தனம் கொண்ட மோசமான காட்டிலாகா அதிகாரியாக தான் பஹத் பாசில் நடிக்கிறார் என்று ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழர்கள், செம்மரக்கடத்தல் என்கிற சர்ச்சை பின்புலத்தில், கதை நகர்வதால் தான், இதில் நடிக்க விரும்பாமல் விஜய்சேதுபதி விலகி கொண்டதாகவும், பஹத் பாசில் மலையாளி என்பதால், அவரை வைத்து, இந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து கொள்ளலாம் என்பதால் தான், அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.