ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் தனுஷின் தந்தையும், டைரக்டருமான கஸ்தூரி ராஜா மீது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை சவுகார் பேட்டையை சேர்ந்தவர் முகஞ்சந்த் போத்ரா. இவர் திரைப்படத் துறையினருக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வருகிறார். சென்னை ஐகோர்ட்டில் முகந்த் சந்த் போத்ரா ஒரு செக்மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், இயக்குனர் கஸ்தூரி ராஜா ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் சினிமா கம்பெனி வைத்துள்ளார். படவேலைகளுக்காக என்னிடம் அவர் ரூ.65 லட்சம் கடன் பெற்றார். நடிகர் தனுஷ் தனது மகன் என்றும், ரஜினிகாந்த் மகளை அவர் திருமணம் செய்துள்ளார் என்றும், எனவே கடனை திருப்பித் தரமுடியும் என்றும் உறுதி அளித்து இருந்தார். ஆனால் வாங்கிய பணத்தை அவர் திருப்பித்தரவில்லை. பலமுறை வற்புறுத்திய பிறகு ரூ.40 லட்சத்துக்கும், ரூ.25 லட்சத்துக்கும் தனித்தனி செக் கொடுத்தார். வட்டிக்கும் இன்னொரு செக் வழங்கினார். ரூ.40லட்சம் செக்கை பாங்கில் செலுத்தினேன். அது பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது. இதையடுத்து கஸ்தூரி ராஜா மீது போலீசில் செக் மோசடி புகார் அளித்தேன். அதன் மீது இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே போலீசாருக்கு கஸ்தூரி ராஜா மீது வழக்கு பதிவு செய்யும்படி கோர்ட் உத்தரவிட வேண்டும், என்று கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.