டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம் பிள்ளை. 1712ம் ஆண்டு பிறந்தவர். இயற்பெயர் நீலகண்டபிள்ளை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னரான ராஜமார்த்தாண்ட வர்மனிடம் படைத் தளபதியாக இருந்தவர். அதே படையில் மற்றொரு படைத் தளபதியாக இருந்து டி லெனாய் என்ற ஆங்கிலேயருடன் நட்பு ஏற்பட்டு அவரிடமிருந்து கிறிஸ்தவம் பற்றியும், இயேசு பற்றியும் அறிந்து அதன்பால் ஈர்ப்பு ஏற்பட்டு கிறிஸ்தவராக மாறினார். இதனால் சமஸ்தானம் அவரை படையில் இருந்து நீக்கி கிருஸ்தவத்தை விட்டு விலகுமாறு கொடுமைப்படுத்தியது. அதற்கு அஞ்சாமல் வாழ்ந்த தேவசகாயம் பிள்ளையை சுட்டுக் கொன்றது. கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதி மக்கள் அவரை தெய்வமாக போற்றி வருகிறார்கள். தற்போது அவருக்கு போப் ஆண்டவர் புனிதர் பட்டம் அளிக்க இருக்கிறார். புனிதர் பட்டம் பெறும் முதல் இந்தியர், முதல் தமிழர் அவர். இப்போது அவரது வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க இருக்கிறார்கள். ரெயின்போ மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் புவனேஸ்வரி என்பவர் தயாரிக்கிறார். மதுமாறன் என்ற புதுமுகம் தேவசாகயமாக நடிக்கிறார். கே.பி.மனோகரன் இயக்குகிறார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவசகாயம் பிள்ளை வாழ்ந்த பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடக்கிறது. படத்திற்கு "அருளாளர்" என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
நல்ல காரியம் பண்றீங்க.