ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
ராட்டினம் படத்தில் அறிமுகமான ஸ்வாதி, இப்போது பாலசேகரன் இயக்கியுள்ள ஒருவர் மீது இருவர் சாய்ந்து என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த இரண்டு படங்களிலுமே கிளாமர் என்பதை மருந்துக்கும் காட்டாமல்தான் தெறமை காட்டியிருக்கிறார். என்றாலும், அடுத்தடுத்து அவரிடம் கதை சொன்னவர்கள் எல்லாமே கதைக்கு கிளாமர் தேவைப்படுகிறது. அதனால் பூட்டிய கதவுகளை திறந்தால்தான் வேலைக்கு ஆகும் என்று கண்டிசனாக சொல்லி விட்டார்களாம்.
அதனால், இதுவரை நானாவது கிளாமர் காட்டுவதாவது. என்னிடம் ஏகப்பட்ட தெறமை இருக்கிறது என்று எக்கச்சக்கமாக பேசிக்கொண்டிருந்த ஸ்வாதி இப்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டார். அதாவது கதைக்கு அவசியம் என்றால் கிளாமராக நடிப்பேன் என்பதுதான் அது. கவர்ச்சிக்கு தாவும் எல்லா நடிகைகளும் முதன்முதலாக பேசும் வழக்கமான டயலாக் இதுதான். இதுபோதாது நம்முடைய டைரக்டர் அண்ணன்மார்களுக்கு, அவசர அவசரமாக ஸ்வாதியை வரவைத்து விதவிதமான கவர்ச்சி ஆடைகளில் தோலுரித்து போட்டோ செசன் நடத்தி வருகிறார்கள். அதில் ஒருவர், அம்மணியை அயிட்டம் பாடலுக்கு ஆட வைக்கவும் ரகசியமாக திட்டமிட்டுள்ளாராம்.