'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் டைரக்டர் சமுத்திரகனி, சசிகுமார் ஆகிய இருவரும். சசிகுமார் இயக்கி நடித்த சுப்பிரமணியபுரத்தில் வில்லனாக நடித்தார் சமுத்திரகனி. அதில் முளை விட்ட அவர்களது நட்பு, பின்னர் ஆலமரமாய் தழைத்தது. அதன்காரணமாக, பின்னர் சசிகுமாரை வைத்து நாடோடிகள் என்ற படத்தை இயக்கினார் சமுத்திரகனி, அப்படம் மெகா ஹிட்டாகவே அவர்களது நட்பு இன்னும் ஆழமானது. எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்கிற அளவுக்கு கொண்டாட்டம் கும்மாளம் என் பின்னி பெடலெடுத்து வந்தார்கள்.
இந்நிலையில், அதன்பிறகு சசிகுமார் இயக்கத்தில் ஈசன் படத்தில் நடித்த சமுத்திரகனி, போராளி என்ற படத்தையும் சசிகுமாரை வைத்து இயக்கினார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை. இதனால் பணக்கஷ்டத்தில் சிக்கிக்கொண்டார் சசிகுமார். ஆனால் இது தெரிந்தும் அந்த படங்களுக்காக தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கியை கேட்டு அடிக்கடி டார்ச்சர் கொடுத்தாராம் சமுத்திரகனி. இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட, அதன்பிறகு இருவருமே பேசிக்கொள்வதில்லையாம். நட்பில் விரிசல் ஏற்பட்டு, இப்போது தனித்தனியே பயணித்து வருகிறார்கள்.