Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொறுப்பற்ற மக்களே காரணம் - கூல் சுரேஷ்

14 மே, 2021 - 20:45 IST
எழுத்தின் அளவு:
Irresponsible-people-are-the-reason-for-corona-increasing-says-Cool-Suresh

பொறுப்பற்ற மக்களே கொரோனா பரவலுக்கு காரணம்' என நடிகர் ‛கூல்' சுரேஷ் கூறியுள்ளார். அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வரவேற்பை பெற்றுள்ளது.

காமெடி மற்றும் வில்லன் வேடங்களில் நடித்தவர், ‛கூல்' சுரேஷ், நண்பர்களுடன் இணைந்து நற்பணிகளை செய்து வரும் இவர், ‛பொறுப்பற்ற மக்களே கொரோனா பரவலுக்கு காரணம்' என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசிய வீடியோ முகநுாலில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நிறைய பேர் அரசு மருத்துவமனையையும், நிர்வாகத்தையும் குறை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். ‛அரசு மருத்துவமனைக்கு யாரும் வராதீர்கள்' என்றெல்லாம் சொல்கின்றனர். ‛பிணத்தை எரிக்க கூட முடியவில்லை' என்கின்றனர். ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருக்காமல், ஊரை சுற்றி விட்டு, வியாதியை வாங்கி மற்றவர்களுக்கும் தந்து விட்டு அப்புறம் அம்மாவுக்கு, ஆயாவுக்கு உடல் சரியில்லை என கதற வேண்டியது. குறையை நம்மிடம் வைத்துக் கொண்டு மற்றவர்களை குற்றம் சாட்டக்கூடாது. நோயை மற்றவர்களுக்கு பரப்ப கூடாது என்று தான் ஊரடங்கு போட்டுள்ளனர்.

காய்கறி, மளிகை, மீன்கடை எல்லாம் இன்றோடு மூடி விடுகிற மாதிரி, இன்றே சாப்பிட்டு விட்டு செத்து விட வேண்டும் என்பது போல், முண்டியடித்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குகின்றனர். ஒருவரை நான், ‛எங்கு செல்கிறீர்கள்?' என கேட்டால், ‛துடைப்ப கட்டை வாங்க போகிறேன்' என்கிறார். அவரை அதனாலேயே அடிக்க வேண்டும். அவர் வீட்டில் இருவர் கொரோனாவால் பாதித்துள்ளனர். வெளியே பரவாமல் இருக்க வீட்டில் இருக்க சொன்னால் அவர் வெளியே சுற்றி வருகிறார். இப்படி இருந்தால் கொரோனா எப்படி குறையும்.

அரசு தரும் சில சலுகைகளை நாம் தவறாக பயன்படுத்த கூடாது. தயவு செய்து தேவைக்கு மட்டும் வெளியே போங்கள். நாம் முயற்சித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
யுவனுக்கு நன்றி சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன்யுவனுக்கு நன்றி சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான் ... ஷங்கருக்கு எதிராக அடுத்த நடவடிக்கையில் லைகா ஷங்கருக்கு எதிராக அடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

c.k.sundar rao - MYSORE,இந்தியா
15 மே, 2021 - 09:35 Report Abuse
c.k.sundar rao Why these statements were not issued when EPS was in power.
Rate this:
மெய்ப்பொருள் மிக சரியாக சொன்னார்...
Rate this:
Manian - Chennai,ஈரான்
15 மே, 2021 - 00:59 Report Abuse
Manian இதுலே புதிசு என்னா இருக்கு? வந்தேறி ராமசாமி நாயக்கரே திராவிட பசங்க எல்லாம் "காட்டு மிராண்டிகள்" என்ற போலி பகுத்தறிவாளிங்கனாரே அல்லாடி குடிக்க வச்சு வருமானத்தை கொள்ளை அடிச்ச இன்னொரு வந்தேறி கருணா நாயுடு குடும்பத்தையே தலைவனாக ஏத்துகிட்ட 70-80% ஓட்டை விக்குறவனுகளை இன்னும் எப்பூடி திருத்த முடியும்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in