‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கொரோனா இரண்டாவது அலையை தடுக்கும் பொருட்டு, அதன் பணிக்காக திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை அளித்து வருகின்றனர். அந்தவகையில் திரையுலகினர் சூர்யா குடும்பம், அஜித், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கி உள்ளனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த்தின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா, தன் கணவர் விசாகன் குடும்பம் சார்பாக ரூ.1 கோடி நிதிக்கான காசோலையை தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேரில் வழங்கினார். இந்த சந்திப்பின் போது சவுந்தர்யா, விசாகன் மற்றும் வணங்காமுடி (சவுந்தர்யா மாமனார்) ஆகியோரும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். அபெக்ஸ் பார்மெசி என்ற நிறுவனத்தை விசாகன் நடத்தி வருகிறார். தங்கள் நிறுவனத்தின் சார்பாக இந்த நிதியை வழங்கி உள்ளனர்.